உணவாம் ஆண்டவர்!
இறை மொழி : யோவான் 21:9-11.
9. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
இறை வழி:
உழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு.
உண்ண உண்ண, இன்பம்.
பிழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு;
பின்னால் வருமே துன்பம்.
அழைத்தவர் தருகிற உணவும் உண்டு.
அதுதான் மா பெரும் இன்பம்.
தழைக்கச் செய்யும் இறையும் உண்டு;
தரார் நமக்குத் துன்பம்!
ஆமென்.
![May be an image of table, banner, tablecloth and text that says 'The Lord's Table'](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/414413831_7229594147071325_1552133355610026479_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=JyS7G7MQsM0AX94pABg&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfBz9g01nQ8VMu8hKxbs1LW3-yE6YGu_HiECp06VckdmRg&oe=6594ADC0)