வேண்டாம் பழமை!


​பழையதும் புதியதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:21-22.

“எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கிழிந்த பழைய ஆடையைத் தைக்க  
கோடித் துணியை ஒட்டுகிறேன்.
பிழிந்த சாற்றை ஊற்றி வைக்க,
பழைய குவளையில் கொட்டுகிறேன்.
இழிந்த வாழ்க்கைத் தவற்றைக் கொண்டு 
இந்த நாளைக் கட்டுகிறேன்.
வழிந்த அருளால் புதுமையாக்கும்;
வேண்டாம் பழமை, வெட்டுகிறேன்!
ஆமென்.

Leave a Reply