விருந்தின் மகிழ்வே கிறித்தவ வாழ்வு!

நற்செய்தி மாலை: மாற்கு 2:18-20.

“யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ‘ யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
நற்செய்தி மலர்:
விருந்தின் மகிழ்வாம் கிறித்தவ வாழ்க்கை;
வேறு விதமாய் விளக்காதீர்.
மருந்து விழுங்கிய மந்தியைப் போன்று,
மயங்கி வாழ்வையும் இழக்காதீர்.
திருந்த வைக்கும் கிறித்துவின் வாக்கைத் 
தெரியா தெதுவும் உரைக்காதீர்.
இருந்து அழிக்கும் அழுக்கை நீக்கும்,
இறைவனின் அருளையும் மறக்காதீர்.
ஆமென்.

Leave a Reply