நல்வழி:
பொல்லான் என்று புவியோர் சொன்னால்,
பொல்லானாகிக் கெடுவேனோ?
நல்லான் என்று நால்வர் கண்டால்,
நல்லவனாகியும் விடுவேனோ?
இல்லாதவரை ஏய்ப்போர் நோக்கில்,
இவைகள் பெருமை ஆகலாம்.
எல்லாமறிந்த இறையின் வாக்கில்,
இழிவுச் சிறுமை நோகலாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.