யார் பெரியவர்?

யார் பெரியவர்?
ஒன்றிற்கும் இரண்டிற்கும் போனபின்பு,
உடலை நாமே கழுவுகிறோம்.
என்றிருந்தாலும் நம் அழுக்கை
எங்கோ வீசி நழுவுகிறோம்.
முன்னின்று தூய்மை செய்பவரை
முறைத்தும் குறைத்தும் நோக்குகிறோம்.
நன்றியிலாத நம்மைத்தான்,
நாட்டில் பெரியவர் ஆக்குகிறோம்!
-கெர்சோம் செல்லையா

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply