முடித்தார்!
இறை மொழி: யோவா 19:30.
30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
மூன்று பதினொரு ஆண்டுகள் வாழ்ந்து,
மும்மையின் நடுவர் முடிக்கிறார்.
தோன்றிய நாள் முதல் தொடாதிருந்து,
தொலையாத் தீவினை முடிக்கிறார்.
ஆன்றவர் அறிவார், அருட் பயன் பெறுவார்;
ஆண்டவர் திருப்பணி முடிக்கிறார்.
சான்றினைக் கொண்டோர் தொடர்கிறார்;
சாகா வாழ்வு பிடிக்கிறார்!
ஆமென்.
![May be an image of text](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/404241131_7080033778694030_7556733005109341540_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Re0rUMC__fsAX858HfZ&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfBCFBQr95NLy3xPfdyvBAZjjZ8de4EJqW3FW08CYpFB_Q&oe=655F2F6E)