பரபா என்று இன்னொரு இயேசு!
இறைவாக்கு: மத்தேயு 27:15-16.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்:
“மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.”
இனியவாழ்வு:
பரபா என்றொரு இயேசிருந்தான்;
பாழாய் வாழ்க்கை வாழ்ந்திருந்தான்.
அரவாய் நஞ்சை அவன் வைத்து,
அடிக்கடி கொள்ளை கொலைசெய்தான்.
இரவாய் பகலாய் இவன் செய்த
இரக்கம் இல்லாச் செயல்களினால்,
திறவாதிருந்த சிறைக்கதவு,
திடுமெனத் திறக்க, பிடிபட்டான்!
ஆமென்.
![பரபா என்று இன்னொரு இயேசு!
இறைவாக்கு: மத்தேயு 27:15-16.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்:
"மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்."
இனியவாழ்வு:
பரபா என்றொரு இயேசிருந்தான்;
பாழாய் வாழ்க்கை வாழ்ந்திருந்தான்.
அரவாய் நஞ்சை அவன் வைத்து,
அடிக்கடி கொள்ளை கொலைசெய்தான்.
இரவாய் பகலாய் இவன் செய்த
இரக்கம் இல்லாச் செயல்களினால்,
திறவாதிருந்த சிறைக்கதவு,
திடுமெனத் திறக்க, பிடிபட்டான்!
ஆமென்.](https://scontent-b-cdg.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s480x480/10612677_816721991691938_6956402681096793182_n.jpg?oh=9aee0c97283e26330d3eebb20ea92d36&oe=5496188D)