நிலை வாழ்வுற்ற தம்பியே, வாழ்க!
இலையுதிர் காலம் இதுவன்றோ?
இப்படிச் சொன்னது நீயன்றோ?
சிலைபோல் சாய்ந்தாய் ஏனின்றோ?
செய்தியால் விழுவது நான் அன்றோ?
நிலை வாழ்வளிப்பது இறையன்றோ?
நேர்மை தரும் உன் உறவன்றோ?
அலைகிற எனக்கும் வரும் என்றோ?
அதுவரை அழுவது தான் நன்றோ?
-கெர்சோம் செல்லையா.