நல்லடக்கம்!
இறை மொழி: யோவான் 19:41-42.
41. அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
42. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
இறை வழி:
சில்லறைக் காசு எதுவுமில்லாமல்,
செய்தி போல் வாழ்ந்து இறந்தவர்,
கல்லறைக் காட்சி நன்கு அடைந்தது
காண்பவர் கண்ணில் விந்தையே.
நல்லறம் செய்து நலிந்தவர்க்குதவி,
நாவிலும் தீதைத் துறந்தவர்,
இல்லார் என்று இறந்து கிடப்பது,
எப்படி ஏற்பார் நம் தந்தையே?
ஆமென்.
![No photo description available.](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/405544070_7100771283286946_7769074317189696989_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LK0doTu5KDQAX-wXOrm&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfCHmEN66QYtWCwbnHthyztzXxRPh8S9VRrTrWoFFpdEwA&oe=6565A8F6)