நற்செய்தி

வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு,
வேண்டும் நம்முள் அருள் வாக்கு.
பற்றிக் கொண்ட பாவம் நீக்கு;
பாரில் இதுவே சரி நோக்கு!
நல்வாழ்த்து:
தீமைகள் என்னைச் சூழ்ந்தாலும்,
தெய்வமே உம்மைப் புகழ்ந்திடுவேன்.
ஊமையாய் இருக்க வைத்தாலும்,
உள்ளத்தால் நான் போற்றிடுவேன்.
நல்வாக்கு:மத்தேயு 25:8-9.
”அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘ எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ‘ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘ உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ‘ என்றார்கள்.”
 

நல்வாழ்வு:

கொடுத்து மகிழும் இறையிடம் கேட்போம்;
கொடுக்கும் காலம் வாங்கிடுவோம்.
அடுத்து  நிற்கும் மனிதரைக் கேளோம்;
ஆவியரிடமே ஏங்கிடுவோம்.
தடுத்து நிறுத்தும், தவற்றை உணர்த்தும்,
தந்தையின் வாக்கைப் பரப்பிடுவோம்.
எடுத்து வைக்கும் விளக்கில் எண்ணெய்
இருக்க வேண்டும், நிரப்பிடுவோம்!
ஆமென்.

 

Leave a Reply