நற்செய்தியும் நல்வாழ்வும்

பேசும் வாக்குகள் வாக்கல்ல;
பிழைகள் உண்டு அறிவீரே.
இயேசுவின் வாக்கே திருவாக்கு;
இதனை உணர்ந்து வருவீரே!
நல்வாழ்த்து:
நம்பிக்கையாலே நேர்மை தரும்
நல்லிறையே உமைப் போற்றுகிறேன்.
எம்மக்கள் யாவரும் நேர்மைபெற
இன்றும் உம்மை வேண்டுகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:10-13.
”அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ‘ என்றார்கள். ‘ அவர் மறுமொழியாக, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ‘ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு:
அருட்கதவு திறந்துளது;
ஆண்டவருள் வாருங்கள்.
அடைத்தபின்னர் திறவாது;
அனைவருக்கும் கூறுங்கள்.
இருட்காலம் வருகிறது;
இயேசுவையே பாருங்கள்.
இன்றே விடுதலை நாள்;
இறையரசில் சேருங்கள்!
ஆமென்.
பி.கு.
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
பாதுகாக்கிறார் மகிழ்கின்றேன்.
இயன்ற வரையில் மன்றாட
இனிய நண்பா, கேட்கின்றேன்!

Leave a Reply