நம்மை விடவும் வலியோன்!


​நம்மை விடவும் வலியோன்!

நற்செய்தி மாலை: மாற்கு 3:27

“முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
நற்செய்தி மலர்:
நம்மை விடவும் வலியோன் ஒருவன் 
நம்மில் உள்ளான், அறிவீரா?
நன்மை செய்ய தன்னை இழப்பான்; 
நாடும் இறையைத் தெரிவீரா?
பொம்மை போன்றுத் தலையை ஆட்டி,
போக்கு சொல்லல் விடுவீரா?
பொய்மை விட்டு, உண்மை காண, 
புனிதன் இயேசுவைத் தொடுவீரா?
ஆமென்.

Leave a Reply