வேண்டாம் பிளவு!

வேண்டாம் பிளவு!
நற்செய்தி மாலை: மாற்கு 3:26
“சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.”
நற்செய்தி மலர்:
பிரித்து ஆளும் பிசாசுகூட 
பிளவைத் தன்னில் விரும்பானே.
எரித்துபோடும் நெருப்பும்கூட
இணைப்பால் வந்த பயன்தானே.
சிரித்து மயக்கி பிரிக்க வந்தால்,
செயலைக் கொஞ்சம் நினைப்பீரே.
விரித்து வைக்கும் வாக்கினாலே,
வேண்டும் இணைப்பை அணைப்பீரே!
ஆமென்.

Leave a Reply