துன்புற்ற இவ்வுலகில்!
இறை மொழி: யோவான் 16: 33.
33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
துன்புற்ற இவ்வுலகில், துணையாகும் இறையே,
துணிவும் உன் ஈவே, தொடர்ந்தெனை நிறையே.
இன்புற்று வாழுங்கால் எண்ணுவேன் குறையே;
யானும் உனைப் பார்த்து, உதவுவேன் முறையே.
அன்பற்ற மனிதர்களாய் வாழ்பவர்கள் கறையே.
அறிந்தும் நடவார்கள், அடைவார்கள் அறையே.
தென்பட்ட மக்களுக்குத் தேவை நல்லுரையே.
தெரிவிக்க அடிக்கிறேன், இறையரசு பறையே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
![May be an image of boat, sail and text that says 'These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: the but be of good cheer; I have overcome the world. John 16:33'](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/377953490_6813989771965100_564932093695731958_n.jpg?stp=dst-jpg_s960x960&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=49d041&_nc_ohc=0kI_KcFLUiMAX8O8aRD&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfBqbIxmhh5iJK4-421G3siIQxUDgfflakN39gM_ZpWfcA&oe=650391AA)
Like
Comment
Share