தேடுவோர் முன்!
இறை மொழி: யோவான் 18:4-5.
4. இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
5. அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
இறை வழி:
கொல்ல வருபவர் என்றே அறிந்தும்,
கொடுக்க இயேசு முன் சென்றார்.
நல்ல எண்ணம் கொள்ளார் வந்தும்,
நன்மையாக்கவே, அவர் சென்றார்.
எல்லை இல்லா அன்பை ஈந்தும்,
எதிர்ப்பார் கொல்லவே நின்றார்.
சொல்லை அறியார் பெருத்திருந்தும்,
சொன்ன சொல்லாய் இறை நிற்பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
![May be a graphic of monument](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/387759966_6924543114243098_1020219019020389625_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=49d041&_nc_ohc=_oZnPwfQuiEAX9Uphor&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfBY8g9Sfw71B4iYQxaISJqPosNZpoInYYRzqsIOQsCs-g&oe=6528C1DA)