தீயோன் ஓடுதல் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 – 26.
” வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ‘ என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.”
நற்செய்தி மலர்:
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;
உண்மை இதுவே புரிந்திடுவோம்.
என்றும் தீயோன் நமை வெல்லான்;
இயேசு முன்னர் அவன் நில்லான்.
இன்று நம்மை ஆட்டுவிக்கும்,
இழிந்த பேயும் மாட்டிவிடும்.
தொன்று தொட்டு இது உண்மை;
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!
ஆமென்.
