தவறுணர்த்தும் பதில்!
இறை மொழி: யோவான் 18:21-23.
21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
இறை வழி:
ஏது எதுவும் இல்லாதிருந்தும்,
ஏன் காவலர் அடித்தார்?
தீது இது; தெரியா மனிதர்,
தீமையைத்தான் பிடித்தார்.
வாது செய்யும் நோக்குடையார்,
வரிந்து கட்டத் துடிப்பார்.
தூது என்னும் இறைமகனோ,
தவறுணர்த்திக் கொடுப்பார்!
ஆமென்.
![May be an image of text that says 'Jesus answered him, Iflhave spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me? John 18:23 KJV'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/393502258_6953893687974707_5703626145092935213_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3TUhQqqDiRgAX8vzSIQ&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfDyjUrXD0rf_-91UYP4GR9mhJE_xIVr10ZrU9nS7YHn-w&oe=6533BCE7)