ஒளிவு மறைவில்லை!
இறை மொழி: யோவான் 18: 19-21.
19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
இறை வழி:
தெளிவு தேடும் என் நாட்டாரே,
தெய்வ வாக்கு கேளுங்கள்.
ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை;
உளம் திறந்து கேளுங்கள்.
பொழிவு நாடும் என் வீட்டாரே,
பொய்மை விட்டு வாழுங்கள்.
அழிவு கண்டு அழுபவர் உண்டு,
அன்பில் மீட்டு வாழுங்கள்!
ஆமென்.
