உம்கையாலே தொட்டால் போதும்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24
“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எம் கையாலே எது செய்தாலும்,
எமக்கு வருதல் நோவு ஆகும்.
உம் கையாலே தொட்டால் போதும்,
ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.
இம்மாப் பெரிய நோய் என்றாலும்
இலாது போகும், மருந்தைக் கூறும்.
நம்பாமலே நடப்போர்களுக்கும்,
நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!
ஆமென்.
![நற்செய்தி மாலை's photo.](https://scontent-vie1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12108298_1023424907688311_5036534336606560990_n.jpg?oh=0d471df0d2807056cad4b673bdc56783&oe=56CA2795)