கடைநிலையோரும் பயன்பெறவே…..

​ கடைநிலையோரும் பயன்பெறவே….

நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.

“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”

நற்செய்தி மலர்:

கற்ற அறிவும் பெற்ற மீட்பும்

கடைநிலையோர்க்கும் பயன்தரவே,

உற்று நோக்கும், ஊரும் உறவும்,

உயர்ந்து ஏற, இரங்கிடுமே.

குற்ற மில்லா வாழ்வு வாழும்

கிறித்து அன்பில் அவர் வரவே,

பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;

பரிசு மீட்பு இறங்கிடுமே!

ஆமென்.

Leave a Reply