உம் உடை தொடுவேன்!


​உம் உடை தொடுவேன்…

நற்செய்தி மாலை: மாற்கு 5:25-29.

“அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ‘ நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ‘ என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.”
நற்செய்தி மலர்:
உம் உடை தொடுவேன்;
உடல் நலம் பெறுவேன்.
உம் கை பிடிப்பேன்;
உடனடி பிழைப்பேன்.
தம் உடை இழந்தோர் 
தவிப்பதும் அறிவேன்.
தருவீர் மீட்பை;
அவர் பெற  உழைப்பேன்!
ஆமென்.

Leave a Reply