பற்றுறுதி சற்றுமற்ற …

பற்றுறுதி சற்றுமற்ற …

 நற்செய்தி மாலை: மாற்கு 5:30-34.

“உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ‘ என் மேலுடையைத் தொட்டவர் யார்? ‘ என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘ என்னைத் தொட்டவர் யார்? ‘ என்கிறீரே! ‘ என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ‘ மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பற்றுறுதி சற்றுமற்ற
பாவியனாய் இருந்தும்,
மற்றவர்போல் துரத்தாது,
மகிழ்ந்தணைத்தார், புகழ்வேன்.
குற்றமுள்ள நெஞ்சமுடன்
குனிந்து தலை இருந்தும்,
முற்றிலுமாய் மன்னித்தார்;
முழு அன்பைத் தொழுவேன்!
ஆமென்.

Leave a Reply