இறையறியார்!
இறை மொழி: யோவான் 15: 20-21.
- ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
- அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
இறை வழி:
இறை மகன் வெறுத்து இறையிடம் செல்ல,
இங்கே பலபேர் துடிக்கிறார்.
மறை மொழி மறுத்து, மனிதமும் கொல்ல,
மறைவில் இருந்தும் வெடிக்கிறார்.
சிறை இருப்பறிந்து வெளிவர நல்ல
செவ்வழி நாடுவோர் படிக்கிறார்.
முறை வழி இயேசு, அறிந்தோர் சொல்ல,
முழுதும் நம்பினார் பிடிக்கிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.