இறைவாக்கினர் போன்றே…

இறைவாக்கினர் போன்றே


இறைவாக்கினர் போன்று….

நற்செய்தி மாலை:மாற்கு 6:4-6.

“இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.”
நற்செய்தி மலர்:
உரைப்பதும்  கேளார், உணர்வையும் ஆளார்.
உள்ளூர் என்றே ஒதுக்கியும் தள்வார்.
குரைத்திடும் நாயின் நன்றியும் இழப்பார்;
குறைகள் கூறி தாமும் விழுவார்.
சிரைத்திட்ட தலையில் நோவை ஏற்று,
செய்தி கொடுத்த தூதுவர் போன்று,
நரைத்திட்ட நாமும் பழியினைச் சுமப்போம்;
நம்பிக்கையை வழியென அமைப்போம்!
ஆமென்.

Leave a Reply