பார் முழுதும் புகழ்ந்தாலும்…..


​பார் முழுதும் புகழ்ந்தாலும்….

நற்செய்தி மாலை: மாற்கு 6:1-3.

“அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ‘ இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
பார் முழுதும் புகழ்ந்தாலும்,
பாராட்டி மகிழ்ந்தாலும்,
ஊர் மனிதர் ஏற்பதில்லை;
உண்மையினைப் பார்ப்பதில்லை.
கூர் மழுங்கா பட்டயமாம்
கிறித்தரசன் வாக்காலே, 
ஏர் உழுத நெஞ்சமதில் 
ஏற்பவரோ தோற்பதில்லை!
ஆமென்.

Leave a Reply