இறந்தவரை எழுப்பிவிடும்….

நற்செய்தி மாலை:மாற்கு 5:35-39.
“அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘ உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ‘ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ‘ என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ‘ ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இறந்தவரை எழுப்பிவிடும் வலுமிக்க,
இறைமகனார் நெஞ்சுள்ளே இருப்பதனால்,
மறந்தவர்கள் கொண்டுவரும் துன்புகளும்,
மண்ணாகி மறைந்துவிடும்; நம்பி வாரிர்.
சிறந்தவர்கள் எனும் பதவி உயர்வுபெற,
சீரான பற்றுறுதி வேண்டுவதால்,
திறனின்றி அழுவதனை நிறுத்திவிட்டு,
தெய்வத்தின் காலடியில் அமர வாரீர்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply