இயேசு சொன்னார் கிடைத்தது!
இறை மொழி: யோவான் 21:4-6.
4. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
5. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
இறை வழி:
ஏசு இல்லா திழந்தது.
ஏசு சொல்ல வந்தது.
பேசு பொருள் ஆனது;
பேத மையும் போனது.
மாசு ஏக்கம் பெரியது.
மனக் கலக்கம் புரியுது.
நேச ருள்ளே செல்வது,
நேர்மையாக வாழ்வது!
ஆமென்.
