ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!
நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
“அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.”
நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை,
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,
வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த,
விண்மகன் தொழுதல், நன்மைகளே.
தாழ்த்திட மறுத்து, தலைவனை வெறுத்து,
தம்மை இழத்தல், நாணுங்களே.
ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு
அப்படி எழுதல், காணுங்களே!
ஆமென்.
![ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!
நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
"அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்."
நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை,
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,
வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த,
விண்மகன் தொழுதல், நன்மைகளே.
தாழ்த்திட மறுத்து, தலைவனை வெறுத்து,
தம்மை இழத்தல், நாணுங்களே.
ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு
அப்படி எழுதல், காணுங்களே!
ஆமென்.](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p280x280/10685580_846438415386962_136833653681749774_n.jpg?oh=b443d36f6ecf6638b8dcf7bfe4668cfc&oe=54F34A28&__gda__=1423161601_64174a8224c09e673cd3323c901d4b85)