அலறிட வேண்டாம்!

அலறிட வேண்டாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:35-38.
“அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘ அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ‘ என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ‘ போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ‘ என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
இயற்கை விதியும்,
இறையைக் கேட்கும்.
செயற்கைச் சதியும்,
சொல்லால் அடங்கும்.
அயர்ந்தார் என்று,
அலறுதல் வேண்டாம்.
பயனைப் பெறுவோம்,
பற்றைக் கொண்டாம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply