அன்பே சட்டமாகட்டும்!

அன்பே சட்டமாகட்டும்!
உயிருக்கென்று உயிரை எடுக்கும்,
ஓட்டைச் சட்டம் ஒழியட்டும்.
கயிறை இன்று கழற்றி விடுக்கும்,
கனிந்த அன்பே வழியட்டும்.
பயிராய் நெஞ்சில் பண்பை வளர்க்கும்
பயின்றோர் வாக்கு ஆளட்டும்.
அயராதுழைப்போம், அன்பே வாழும்;
அதுவே, சட்டம் ஆகட்டும்!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply