அருஞ்செயல் அறியார்!
இறைவாக்கு: யோவான்: 12: 36-37.
36. ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
37. அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
இறை வாழ்வு:
உருட்டும் புரட்டும் உணவாய்க் கொண்டோர்,
உண்மை வாழ்வு நாடாரே.
திருட்டும் களவும் தொழிலாய்க் கண்டோர்,
தெய்வ வழியும் தேடாரே.
இருட்டைப் போற்றும் குருட்டு இனத்தோர்,
இறையின் அதிசயம் பாடாரே.
மிரட்டும் தீவினை புரட்டும் நாளில்,
மீட்பரை ஏற்பின், வாடாரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.