மேலோன் அன்பு!

மேலோன் அன்பு ஊறட்டும்!

சாதியில் உயர்ந்தோர் என்று நினைப்போர்,
சரிசமனாகிட இறங்கட்டுமே.
நீதியில் உயர்த்தும் கிறித்துவை ஏற்று,
நேர்மை புரியக் கறங்கட்டுமே.
பீதியில் தாழ்ந்திட்ட எளிய இனத்தோர்,
பிழையுமுணர்ந்து ஏறட்டுமே.
மீதியில் இருக்கிற நமது வாழ்வும்,
மேலோன் அன்பில் ஊறட்டுமே!

-கெர்சோம் செல்லையா.