அடிமையா? பிள்ளையா?
நற்செய்தி: யோவான் 8: 35-36.
நல்வழி:
திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன்.
தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.
பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன்.
பழியில் விழவே கெட்டிருந்தார்.
பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன்.
பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.
விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன்.
விண் மகவாகத் தொட்டிருந்தார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.