அன்பே ஆளும்!

​கக்கனுமில்லை, காமராசில்லை,
கள்வரே தேர்தலில் நிற்கின்றார்.
மக்களை நினையா மக்குகள் ஆள,
மாநில வாக்கைச் சேர்க்கின்றார்.
எக்குறையில்லா ஆட்சியைக் கேட்டு,
இறை வா என்று நான் விழுந்தேன்.
அக்கறையோடு அவரும் சொன்னார்;
அன்பே ஆளும்; நான் எழுந்தேன்!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply