விண்ணூழியரே அள்ளாதீர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:4.

4பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
கிறித்துவின் வாழ்வு:
காசுக்கென்றும் பொருளுக்கென்றும் 
கடவுள் நாடி வருவோர்கள்,
பேசும் தெய்வ வாக்கு கேளார்;
பையை நிரப்பிக் கொள்ளாதீர்.
மாசுக்குற்றம் மலிந்த நெஞ்சம்
மாற வேண்டிக் கேட்போர்கள்,
வீசுவார்கள் காசைத் தூசாய்;
விண்ணூழியரே, அள்ளாதீர்!
ஆமென்.

Leave a Reply