மண்ணில் அமைதி மலர்வதற்கென்று…

மண்ணில் அமைதி மலர்வதற்கென்று…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:13-14.
13 அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
மண்ணில் அமைதி மலர்வதற்கென்று,
மனிதரை இணைக்கும் பணி செய்வோம்.
எண்ணம், பேச்சு, செயலில் இன்று,
இறைவன் அன்பால் அணி செய்வோம்.
விண்ணின் வேந்தன் மாட்சியடைய,
விரும்பும் நன்மையைத்தாம் செய்வோம்.
திண்ணம் ஒரு நாள் தீமை ஒழியும்;
தெய்வ அரசாய் நாம் உய்வோம்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply