இறைவாக்கு: லூக்கா 1:56-58.
56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
இறைவாழ்வு:
பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்;
பெறாதவள் பெற்றால் பெருமகிழ்வாகும்.
உள்ளத்தின் மகிழ்வு உறவிலும் பரவும்;
உறவுகள் வழியாய் ஊரும் மகிழும்.
வெள்ளத்தின் வலிமை பெற்றிருந்தாலும்,
வேண்டும் இறையருள், பிள்ளை பிறக்கும்.
கள்ளத்தின் வாழ்வும் மலடேயாகும்;
கடவுளில் பிறப்போம், களிப்புண்டாகும்!
ஆமென்.
![Image may contain: one or more people and close-up](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/26733698_1708359619194833_4821204871965257679_n.jpg?oh=de23a82b22824dea63ad54867f659e24&oe=5AF754C6)