வேளை வரும்!

காலம், நேரம் கடவுள் கையில்!  

நற்செய்தி: யோவான் 2:3-4.  

நல்வழி:  

காலம் நேரம், கனியும் என்று,
கடவுளை நம்பிக் காத்திருப்போம். 
ஞாலம் மீளும் அவரால் இன்று;
நடக்கும் காட்சி பார்த்திருப்போம்.  
பாலம் ஒன்று இணைத்தல் போன்று,    
பலரை இறையுள் சேர்த்திடுவோம்.
கோலம் யாவும் அழியும் அன்று; 
கிறித்து வரவில் ஆர்த்திடுவோம்! 
ஆமென்.
-செல்லையா.

Leave a Reply