வேறுபிரிக்கத் தெரியாதார்!

வேறு பிரிக்கத் தெரியாதார்!

வெங்காயமா, வெள்ளைப் பூண்டா?
வேறு பிரிக்கத் தெரியாதார், 
இங்கே வந்து எதையோ சமைத்து,
இதையமுதாய் உண்ணு என்றார்.

பொங்காதவரா, பொன் சேர்ப்பவரா?
பொருளியல் அறிவு இல்லாதார்,
எங்களையாளும் நிலையிலுயர்ந்து,
இடியமீனாய் எண்ணுகின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply