அருள் வடிய வேண்டு!
தொடக்கம் அறியாத் தொற்று ஓன்று,
தொண்டையின் கீழே வருகிறது.
கிடக்கும் இடமும், மருந்துமிலாது,
கேட்கவே அச்சம் தருகிறது.
அடக்கம், எரித்தல் சடங்கும் இன்று,
ஆட்களில்லாமல் முடிகிறது.
முடக்கும் தொற்று முடிய வேண்டு.
முன்னே இறையருள் வடிகிறது!
-செல்லையா.