வேண்டுமென்று கேட்கிறார்!

வேண்டுமென்று கேட்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:32-35.

32  அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.

33  கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34  அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35  அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

வேண்டுமென்று கேட்கிறார் இயேசு;

விரும்பி உன்னை அளிப்பாயா?

ஆண்டுகொள்ளும் அரசே என்று,

அடிமை போன்று விளிப்பாயா?

கூண்டுகளிலே அடைப்பதுமுண்டு;

குழம்பி நீயும் ஒளிப்பாயா?

மாண்டுபோவார் மடிவது தடுத்து,

மனம் திருந்தக் களிப்பாயா? 

ஆமென்.

Leave a Reply