வேண்டல் என்னும் ஆயுதம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:12-13.
12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
கிறித்துவில் வாழ்வு:
தேர்வின் முன்பு வேண்டுதல் செய்யும்,
தெய்வ மகனைப்போல் இன்று,
யார் எவர் ஏற்றவர் என்று அறிய,
இந்தியர் வேண்டின் அது நன்று.
போர் வெறிகொண்ட அலகையைத் துரத்த,
பொழுது விடியுமுன் வேண்டிடுவோம்.
கூர் முனையுள்ள ஆயுதம் அதுவாம்;
கொண்டு நாட்டை ஆண்டிடுவோம்!
ஆமென்.
![Image may contain: 3 people, including Daniel Joseph, people standing](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/45370971_2073709342659857_9078487199229411328_n.jpg?_nc_cat=110&_nc_eui2=AeGy_7lw4ZgQqYeYzMMegpVvaKTrLKm3gO8Mp9sGW5nron-e1tjU37X745-IU3y8d0MkYOxEyZbdC4XPkOLLpAXF46lRzly38STZtjNS67cCkg&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=802ff279bac8775f2ffa05afb9a252f6&oe=5C8805A9)