வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!
எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: tree, sky, outdoor, nature and water](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q87/p280x280/31948955_1824423954255065_8117052855849844736_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeECDj4hwoKtqq8oyfqjkCE8Qknz6GdDCY18LblVzKx9spJMJBpwOwYWWpEi_9uDvi_uHpZh2b5jl9awqgFKTbaEwUk7_IGnhOCh5kPv481fLw&oh=08b17b1ac33f87e5ad350bbb78fe3316&oe=5B535809)