வெளியே தெரியா வெறி!
வெளியே சிரித்து, உள்ளே மறைத்து,
வெறித்தனம் கொள்ளும் ஒருகூட்டம்.
தெளிவாய்த் திட்டம் தீட்டுவதாலும்,
தெரியாதிருக்கும் இவ்வட்டம்.
எளிதாய் எவரும் அறியாதிருக்க,
இவர்களுக்கிருக்கும் பல பட்டம்.
புளியாம் இவரை இனிக்க வைக்க,
புரிவோம் அன்பின் திருச்சட்டம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q92/p526x296/39442641_1966699450027514_3674446299568013312_n.jpg?_nc_cat=0&oh=2ee9fd2536b1e2e1b3b2506901eb45ed&oe=5BEFB649)