வீடில்லை!

வீடில்லை!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:37-38.  

37  அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

38  ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிய வீட்டை எனக்குத் தந்த   

இறைமகனுக்கு வீடுமில்லை.  

தனிமை நாடிச் செல்லும் அவரைத்

தாங்குகின்ற நாடுமில்லை.  

பனிமலையில் படுத்து உறங்க,  

பறவைக்கிருக்கும் கூடுமில்லை.  

புனித பயணம் போகும் நமக்கு, 

புரிதல் வந்தால் கேடுமில்லை.  

ஆமென்.  

Leave a Reply