வீடில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:37-38.
37 அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38 ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இனிய வீட்டை எனக்குத் தந்த
இறைமகனுக்கு வீடுமில்லை.
தனிமை நாடிச் செல்லும் அவரைத்
தாங்குகின்ற நாடுமில்லை.
பனிமலையில் படுத்து உறங்க,
பறவைக்கிருக்கும் கூடுமில்லை.
புனித பயணம் போகும் நமக்கு,
புரிதல் வந்தால் கேடுமில்லை.
ஆமென்.