விண் வீடு!

விண் வீடு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:43.  

கிறித்துவில் வாழ்வு:  
திருந்திய கள்வனின் உள்ளம் கண்டு,  
தெய்வ மைந்தன் இடமளித்தார்.  
விருந்தினை ஒத்த விண் வாழ்வுண்டு;   
வீடு பேற்றையும் உடனளித்தார். 
வருந்திய நிலையிலும் அருளாலன்று,    
வாழு என்று மீட்பளித்தார். 
பொருந்திய திறவுகோல் பற்று என்று,    
புரியும்படியாய் விடையளித்தார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

Leave a Reply