விண்ணின்று வந்தால்தான்….


​விண்ணின்று வந்தால்தான்….
நற்செய்தி மாலை: மாற்கு 8:16-18.
“அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ‘ நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?  கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?”
நற்செய்தி மலர்:
கண்ணுண்டு, காட்சியில்லை.
காதுண்டு, கேட்கவில்லை.
பண்புண்டோ, அதுவுமில்லை.
பாருங்கள் மனிதர் நிலை!
எண்ணென்று உரைத்தாலும்,
ஏட்டறிவைக் கொடுத்தாலும்,
விண்ணின்று வந்தால்தான்,
விளங்கிடுவார் விடுதலை!
ஆமென்.

Leave a Reply