விடுதலை நாள் விழா!

விடுதலை நாள் விழா!

இரவில் வந்த விடுதலையை,
இன்று பகலில் நினைந்திட்டோம்.
உறவில் வாழும் குடியிருப்பில்,
ஒற்றுமை மழையில் நனைந்திட்டோம்.
சிறகில் வைத்துப் பறப்பதற்கு,
செய்வோம் நற்பணி என்றிட்டோம்.
விரைவில் நாடு வளருமென,
வேண்டி, வீடு சென்றிட்டோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and people standing

Leave a Reply