வாழ்வானாலும் தாழ்வானாலும்…

வாழ்வானாலும் தாழ்வானாலும்…
நற்செய்தி மாலை: மாலை: மாற்கு 14:69-71.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ‘ இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ‘ என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ‘ உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ‘ என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ‘ நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.”
நற்செய்தி மலர்:
வாழ்வானாலும் சாவானாலும்,
வந்தோம் உம்முடன் என்பவரும்,
தாழ்வானாலும் உயர்வானாலும்,
தந்தோம் தம்முடல் என்பவரும்,
வீழ்வார் உலகில் வீழக்கண்டோம்;
விண்ணரசே எமை நோக்கிடுமே.
பாழாய் நாங்கள் மாளாதிருக்க,
பாவப் பழியும் நீக்கிடுமே!
ஆமென்.

Image may contain: 1 person, text

Leave a Reply