வாளும், வன்முறையும்!


வாளும், வன்முறை ஆயுதமும்,

வாழ்வின் வழிமுறையேயென்றால்,

தாழும் அவரது உள்மதிப்பு,

தலைவன் என்றே இருந்தாலும்.

ஆளும் அரசரின் ஆயுதமாய்,

அன்பும் அறமும் இல்லையென்றால்,

கேளும், அவரது கதைமுடிவு,


கிணறாய் வளமே சுரந்தாலும்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply